Load Image
Advertisement

ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரியில் தொழில்துறை கருத்தரங்கு

 Industrial Seminar at Sri Ishwar College    ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரியில்  தொழில்துறை கருத்தரங்கு
ADVERTISEMENT
கோவை;கோவை ஸ்ரீ ஈஸ்வர் தொழில்நுட்ப கல்லுாரியில், பன்னாட்டு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற, 'இண்டஸ்ட்ரி கனெக்ட்-2023' என்ற தொழில்துறை கருத்தரங்கு, கல்லுாரி அரங்கில் நடந்தது. முதல்வர் சுதா மோகன்ராம் தலைமை வகித்து, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.

இக்கருத்தரங்கில், பட்டதாரிகளிடம் தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு, திறன்கள் மேம்பாட்டின் அவசியம், தொழில்நுட்ப திறன் வளர்ப்பு, ஆளுமைத்திறன், குழுவுடன் இணைந்து செயல்படுத்துதல், நேர்காணல் எதிர்கொள்ளுதல், வெளியுலகில் மாணவர்களுக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.

இதில், மைக்ரோசாப்ட் நிறுவன வளாக வேலைவாய்ப்புத்துறை அதிகாரி முகம்மது பஹாத், கிகாமோன் டெக்னாலஜீஸ் நிறுவன மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குனர் பரதன், கல்லுாரி தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement