Load Image
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு எச்சரித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்:- நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை எச்சரிக்கும் விதமாக இலங்கை கடற்படை வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விரட்டினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 250 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் வழக்கம் போல் இந்திய- இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அன்றிரவு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர்.

அப்போது மீனவர்கள் கடலில் வீசிய வலையை இழுக்க தாமதமானதால் ஆத்திரமடைந்த இலங்கை வீரர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இருமுறை சுட்டனர். இதனால் பீதியடைந்த மீனவர்கள் தொடர்ந்து அப்பகுதியில் மீன் பிடிக்காமல் ராமேஸ்வரம் நோக்கி திரும்பி வேறு பகுதியில் வலை வீசினர்.

இதில் பெரும்பாலான படகில் குறைவான மீன்கள் சிக்கியதால் பெரும் நஷ்டத்துடன் நேற்று ராமேஸ்வரம் கரை திரும்பினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement