Load Image
Advertisement

தமிழ் ஒளிக்கு தஞ்சையில் சிலை

சென்னை:'கவிஞர் தமிழ் ஒளி நுாற்றாண்டை முன்னிட்டு, அவருக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலையில், மார்பளவு சிலை அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கவிஞர் தமிழ் ஒளி, 1924 செப்., 29ல் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் கிராமத்தில் பிறந்தார். விசயரங்கம் என்பது, அவரது இயற்பெயர். பாரதியாரின் வழித்தோன்றலாகவும், பாரதிதாசனின் மாணவ ராகவும் திகழ்ந்து கவிதைகள் படைத்தார்.

அவரது நுாற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு தஞ்சாவூரில் உள்ள தமிழ் பல்கலையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மார்பளவு சிலை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement