ADVERTISEMENT
நுங்கம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோபால் நகர், நியூ காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக், 29. இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், குறைந்த விலையில் 'மசாஜ்' செய்வதாகக் கூறி, அதே பகுதியிலுள்ள குமரப்பா தெருவிற்கு அழைத்துள்ளார்.
இதை நம்பிய கார்த்திக், கடந்த 7ம் தேதி அங்கு சென்ற போது, அங்கிருந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின், அவரிடமிருந்த 4,000 ரூபாய், 12 கிராம் தங்க நகையை பறித்ததுடன், கிரெடிட் கார்டில் இருந்து, 2.04 லட்சம் ரூபாயை எடுத்து தப்பினர்.
இதுகுறித்த புகாரை விசாரித்த நுங்கம்பாக்கம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன், 23, கடலுாரைச் சேர்ந்த விக்னேஷ்வரன், 24, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 கிராம் தங்க நகை, 55,000 ரூபாயை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!