Load Image
Advertisement

அடித்த அடியில் கணவன் பலி அறியாமல் துாங்கிய மனைவி

செய்யாறு:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பூதேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன், 37; இவரது மனைவி மைதிலி, 35. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

தினமும் மது குடிக்கும் மணிகண்டன், நேற்று முன்தினம் இரவு போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், மணிகண்டன் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார்.

பின், மைதிலி துாங்கினார். நேற்று காலை மணிகண்டனை, மைதிலி எழுப்ப முயன்றபோது, அவர் இறந்திருந்தது தெரியவந்தது. மோரணம் போலீசார், மைதிலியை கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement