Load Image
Advertisement

கத்தியால் தாக்கிய நால்வர் கைது



திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, பல்லவன் சாலையை சேர்ந்தவர் இளையராஜா, 30. இவரது, உறவினரிடம் அதேபகுதியை சேர்ந்த அய்யப்பன், 47, ஜான், 19, மகேந்திரன், 23 மற்றும் 17 வயது சிறுவனும் தகராறு செய்துள்ளனர்.

அவர்களிடம் நேற்று முன்தினம், இளையராஜா விசாரித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், இளையராஜாவை உருட்டுக்கட்டை மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.

காயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புகார் படி, திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்து நான்கு பேரையும் கைது செய்தனர். மூவரை சிறையில் அடைத்த போலீசார், சிறுவனை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement