தாம்பரத்தில் உதவி மையம்
தாம்பரம், மகளிருக்கு, 1,000 ரூபாய் திட்டத்தில், ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் இ - -சேவை மையம் வழியாக, வருவாய் கோட்டாச்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள், 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தாம்பரம் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஐந்து மண்டல அலுவலகங்களிலும் உதவி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
இம்மையமானது, அரசு வேலை நாட்களில், காலை 9:30 மணி முதல் மாலை 5:45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆவணங்களுடன் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!