Load Image
Advertisement

கல்லுாரியில் பட்டி மன்றம்

திருப்பூர்:காங்கயம் அரசு கலை கல்லுாரியில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக பன்னீர்செல்வம் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் நசீம்ஜான் தலைமை வகித்தார். பேராசிரியர் குமாரசாமி, நளினி, கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்கால திரைப்படங்களின் தாக்கத்தால் விளைவது பண்பாட்டு சீரழிவா பண்பாட்டு சீரமைப்பா, என்ற தலைப்பில் இப் பட்டிமன்றம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நடுவராக சிவகுமார் பங்கேற்றார்.

பண்பாட்டு சீரழிவே என்ற தலைப்பில் மாதவன், சங்கீதா, பவித்ரா ஆகியோரும், பண்பாட்டு சீரமைப்பே என்ற தலைப்பில் அருணாசலம், அபிநயா, சஞ்சய் ஆகியோரும் பேசினர்.தீர்ப்பில் தற்கால திரைப்படங்களில் விளைவது பண்பாட்டு சீரமைப்பே என பட்டிமன்ற இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement