Load Image
Advertisement

மாணவருக்கு திறனறிவு தேர்வு  

திருப்பூர்:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ள வினாத்தாள் அடிப்படையில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான தேர்வு நேற்று துவங்கியது.

தமிழ்/மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வியியல் உள்ளிட்ட தேர்வுகள், வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. 28 முதல், அக்., 2 வரை ஐந்து நாள் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கடந்த, 15ம் தேதி முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 காலாண்டு தேர்வுகள் துவங்கி நடந்து வருவது, குறிப்பிடத்தக்கது.

வினாத்தாளை அந்தந்த பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட லிங்கில் மட்டுமே தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வேறு பள்ளி லிங்க்கில் பதிவிறக்கம் செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement