Load Image
Advertisement

மாடுகள் வரத்து குறைவு

திருப்பூர்:திருப்பூர், கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில், திங்கள் தோறும் மாட்டுச்சந்தை நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த மாட்டுச்சந்தைக்கு, 642 மாடுகள் வரத்தாக இருந்தது.

இரண்டாம் தர நாட்டு மாடுகள், 47 ஆயிரம் முதல் 56 ஆயிரம் வரையும், எருதுகள், 45 ஆயிரம் முதல், 60 ஆயிரம் வரையும் விலை போனது. கன்று குட்டி வரத்து குறைவால், 11 ஆயிரம் வரை கன்றுகுட்டிகள் விலை வைத்து விற்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தம் நடந்தது. சந்தை ஏற்பட்டாளர்கள் கூறுகையில், 'விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக, ஆட்டோக்கள் சென்றதால், மாடுகளை அழைத்து வர வண்டி இல்லை. எனவே, மாடுகளை கால்நடை வளர்ப்போர் கொண்டு வரவில்லை,' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement