Load Image
Advertisement

டிமேட் கணக்கிற்கு Ÿநாமினி 30க்குள் சமர்ப்பிக்க கெடு

புதுடில்லி:பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான, 'டிமேட்' கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 'நாமினி' யார் என்ற விபரத்தை, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' அறிவித்துள்ளது.

நாமினி விபரம் சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், தொடர்ந்து அவர்கள் எந்த பரிவர்த்தனையையும் செய்ய முடியாதபடி, அவர்களது டிமேட் கணக்குகள் முடக்கப்படும் என்றும்எச்சரித்துள்ளது.

செபியின் அறிவிப்புப்படி, டிமேட் கணக்கு வைத்திருப்போர், ஒரு தனிநபரை நாமினியாக பரிந்துரைக்க வேண்டும். இல்லையெனில், டிமேட் கணக்கிலிருந்து வெளியேறுவது கட்டாயமாகும். எனவே, 30ம் தேதிக்குள் இந்த விபரத்தை வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே, நாமினி விபரங்களை சமர்ப்பித்தவர், மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement