Load Image
Advertisement

கோழிப்பண்ணையால் பாதிப்பு ஆய்வு செய்ய மக்கள் கோரிக்கை

உடுமலை:உடுமலை அருகே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில், செயல்படும், கோழிப்பண்ணை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம், மக்கள் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவு கிராமத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறி, செயல்படும் கோழிப்பண்ணையால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பி.ஏ.பி., பாசன கால்வாய், கிராம குளம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்பு அருகில் இந்த பண்ணை அமைந்துள்ளது.

இறந்த கோழிகளை நீர்நிலைகளில் வீசுவது போன்ற செயல்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து, ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், கால்நடை பராமரிப்புத்துறையினர் நேரில் ஆய்வு செய்து, பண்ணையை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதை சரி செய்யவும், இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், அறிவுறுத்தினர்.

இருப்பினும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement