Load Image
Advertisement

மகளிர் உரிமை தொகை உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு

 Collector Inspection at Womens Rights Fund Assistance Centre    மகளிர் உரிமை தொகை உதவி மையத்தில் கலெக்டர் ஆய்வு
ADVERTISEMENT


விழுப்புரம் ; விழுப்புரத்தில் மகளிர் உரிமை தொகை குறுஞ்செய்தி வரப்பெறாதோருக்காக அமைக்கப்பட்ட உதவி மையத்தை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைதொகை குறித்த குறுஞ்செய்தி வராதோர், குறுஞ்செய்தி வந்து வங்கி கணக்கில் பணம் கிடைக்க பெறாதோருக்கு அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை கலெக்டர் பழனி நேற்று ஆய்வு செய்தார்.

இந்த மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் பழனி, அங்குள்ள விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாராயணமூர்த்தி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement