Load Image
Advertisement

உண்டு உறைவிட பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

 Provide welfare assistance to boarding school    உண்டு உறைவிட பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADVERTISEMENT
உடுமலை;தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின், 24ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் உடுமலை உட்கோட்ட தலைவர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளியிலுள்ள, 40 குழந்தைகளுக்கு, தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினர்.

தொடர்ந்து, உடுமலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், சங்க கொடியேற்று விழா நடந்தது. கோட்டத்தலைவர் வெங்கிடுசாமி, மாநிலத்தலைவர் பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர் அம்சராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement