Load Image
Advertisement

கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம் ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், நின்னக்கரை கிராமத்தில், குடியிருப்பு திட்டத்தை 'ஆர்.வி.எஸ்., டெவலப்பர்ஸ்' நிறுவனம் செயல்படுத்துகிறது. இதில், 24.96 லட்சம்ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்க, ஸ்ரீகாந்த் மார்டா என்பவர், 2014ல், பல்வேறு தவணைகளில், 15 லட்சம் ரூபாயை செலுத்தினார்.

இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, சம்பந்தப்பட்ட நிறுவனம், கட்டுமான பணிகளை துவங்கவில்லை. இதனால், வீடு வாங்குவதில் இருந்து விலகுவதாக, ஸ்ரீகாந்த் அந்நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதற்காக செலுத்திய தொகையை திருப்பித்தருமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால், கட்டுமான நிறுவனம் பணத்தை திருப்பித்தராததால், ஸ்ரீகாந்த், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார்.

அவரது மனு மீது ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மனுவில் குறிப்பிடப்பட்ட கட்டுமான நிறுவனம், குறித்த காலத்தில் கட்டுமான பணிகளை துவங்கவில்லை. மேலும், அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கும் நிலையில் இல்லை என்பதால், மனுதாரரின் முறையீடு ஏற்கப்படுகிறது.

எனவே, வீடு வாங்குவதற்காக, மனுதாரர் செலுத்திய, 15 லட்ச ரூபாயை வட்டியுடன் கட்டுமான நிறுவனம், 30 நாட்களுக்குள் திருப்பித்தர வேண்டும். ரியல் எஸ்டேட் சட்டவிதிகளை மீறியதற்காக, கட்டுமான நிறுவனத்துக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement