ADVERTISEMENT
திண்டிவனம், : திண்டிவனம் அடுத்த தீவனூர் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
திண்டிவனம்-செஞ்சி சாலை, தீவனுாரிலுள்ள விழுப்புரம் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
இதையொட்டி, பொய்யாமொழி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து உற்சவர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் உற்சவர் கோவில் உட்பிரகாரம் வந்து ஊஞ்சலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சகுந்தலா, மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!