Load Image
Advertisement

பங்க் அமைக்க கடனுதவி திட்டம் ;பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்

உடுமலை;ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள், பெட்ரோல் 'பங்க்' அமைக்க, 'தாட்கோ' வாயிலாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வாயிலாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் பெட்ரோல் 'பங்க்' அமைக்கலாம். இதற்கு, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு,'தாட்கோ' சார்பில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற, www.petrolpumpdealerchayan.in என்ற இணையதளத்தில், 18 வயது முதல் 50 வயது உள்ள ஆண் அல்லது பெண், வரும், 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வகையில், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் முதன்முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல் அல்லது டீசல் (ஒரு டேங்கர்) தொகை, குறைந்த வட்டியில் கடனாக வழங்கப்படும்.

எனவே, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தால், தேர்வாகும் விண்ணப்பதாரர்கள், 'தாட்கோ' தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளரை (திட்டங்கள்) 73584 89990 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501 (ம) 503, 5வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியிலும், 94450 29552, 0421 - -2971112 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement