காலாண்டு வந்தாச்சு சைக்கிள் வரவில்லை! பள்ளி மாணவர்கள் அதிருப்தி
உடுமலை:அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தாமதமடைவதால், மாணவர்களுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டு, பெற்றோரும் அதிருப்தியில் உள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கியதும், மாணவர்களின் எண்ணிக்கை பட்டியல் அனுப்பப்பட்ட பின், அவர்களுக்கான சைக்கிள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட பள்ளிகளை மையமாக வைத்து, விழாக்கள் நடத்தி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் பஸ் வசதியில்லாத மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது.
பிளஸ் 1 வகுப்பின் போது சைக்கிள் வழங்கப்படும் பட்சத்தில், இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் இதை பயன்படுத்துகின்றனர். கடந்தாண்டு, பிளஸ் 1 மாணவர்களுக்கு கல்வியாண்டு முடிந்தும், நடப்பாண்டில் காலாண்டு தேர்வு நடக்கும் நிலையிலும், சைக்கிள் வழங்கவில்லை.
திட்டத்தை தாமதப்படுத்துவதால், சைக்கிள் வழங்கியும் எந்த பயனும் இல்லை என பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். நடப்பாண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கும் விரைவில் சைக்கிள் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 முடித்து, நடப்பாண்டில் பிளஸ் 2 வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தற்போது சைக்கிள் உதிரி பாகங்கள் வந்துள்ளன. அவற்றை பூட்டும் பணி நடக்கிறது.
விழா ஏற்பாடு செய்து, மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வரவில்லை,'' என்றார்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கியதும், மாணவர்களின் எண்ணிக்கை பட்டியல் அனுப்பப்பட்ட பின், அவர்களுக்கான சைக்கிள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், குறிப்பிட்ட பள்ளிகளை மையமாக வைத்து, விழாக்கள் நடத்தி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் பஸ் வசதியில்லாத மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது.
பிளஸ் 1 வகுப்பின் போது சைக்கிள் வழங்கப்படும் பட்சத்தில், இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் இதை பயன்படுத்துகின்றனர். கடந்தாண்டு, பிளஸ் 1 மாணவர்களுக்கு கல்வியாண்டு முடிந்தும், நடப்பாண்டில் காலாண்டு தேர்வு நடக்கும் நிலையிலும், சைக்கிள் வழங்கவில்லை.
திட்டத்தை தாமதப்படுத்துவதால், சைக்கிள் வழங்கியும் எந்த பயனும் இல்லை என பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர். நடப்பாண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கும் விரைவில் சைக்கிள் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ''கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 முடித்து, நடப்பாண்டில் பிளஸ் 2 வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தற்போது சைக்கிள் உதிரி பாகங்கள் வந்துள்ளன. அவற்றை பூட்டும் பணி நடக்கிறது.
விழா ஏற்பாடு செய்து, மாணவர்களுக்கு சைக்கிள் வினியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் சைக்கிள் வரவில்லை,'' என்றார்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!