Load Image
Advertisement

பெண்களுக்கு ரூ.1,000 திட்டம் உதவி மையம் திறப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி முகமை வளாகத்தில், மகளிர் உதவித் தொகை திட்டத்திற்கான உதவி மையத்தை, நேற்று, கலெக்டர் ராகுல்நாத் துவக்கி வைத்தார்.

இதேபோன்று, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகா அலுவலகங்களில், உதவி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.

திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவில், உதவி மையத்தை கலெக்டர் ராகுல்நாத் நேற்று துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, உதவி மைய ஊழியர்கள் மற்றும் விண்ணப்பிக்க வந்தோரிடம் குறைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement