Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்:காட்சி தோன்றுவது எப்படி

அறிவியல் ஆயிரம்


காட்சி தோன்றுவது எப்படி

வெளிச்சத்தில் ஒளிக்கதிர்கள் நம் கண் விழித்திரையில் விழுவதன் மூலம் காட்சி
தோன்றுகிறது. ஆனால் கண்களை மூடும்போது நிறங்கள் தெரிவது 'ஒளியறு காட்சிப்போலி' எனப்படும். விழி மூடிய நிலையிலும் கண்கள், மூளையின் பார்வைப் பகுதியில் இயக்கம்
நடந்துகொண்டேதான் இருக்கிறது. கண்கள் திறந்திருக்கும்போது விழித்திரையில் பதியும் ஒளிக்கதிர்கள், மூடிய நிலையிலும் விழித்திரையில் ஒளி துாண்டிய துடிப்பு என தவறாக விளங்கி மூளை அதனைக் காட்சிப்படுத்த முயலும்போதுதான் இவ்வாறு நிறங்கள், காட்சி தோன்றுகின்றன.


தகவல் சுரங்கம்


ரயில்வே பாதுகாப்பு படை

இந்தியாவில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) துவக்கப்பட்ட தினம் (செப்., 20) இன்று கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே சொத்துகள், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக 1872 ஜூலை 2ல் செக்யூரிட்டி படையாக தொடங்கப்பட்டது. பின் 1985 செப்., 20ல் ரயில்வே பாதுகாப்புபடையாக இது மாற்றப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இதில் 75 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். தலைமையகம் டில்லி. தவிர 18 மண்டலங்கள் உள்ளன. 2019 டிசம்பரில் ஆர்.பி.எப்., என்பது இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஐ.ஆர்.பி.எப்., ) என பெயர் மாற்றப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement