ADVERTISEMENT
திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, எல்லீஸ் ரோடு, பங்கராயப்பன் நாய்க்கன் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 58; துறைமுகம் 59வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்.
நேற்று மாலை இவருக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனையில், அவர் இறந்தது தெரிந்தது.
தகவல் அறிந்து, அவரது வீட்டிற்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர், சரஸ்வதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சரஸ்வதியின் கணவர் கருணாநிதி, கேபிள் 'டிவி' நடத்துகிறார். சூரியபிரகாஷ், துர்காதேவி ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!