ADVERTISEMENT
அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன். உலகின் மிகப்பெரிய அலுவலகம் இதுவே. இதுகுறித்த சுவாரஸ்யத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
35 எக்கர் பரப்பளவில் ஐந்து கோணங்கள் கொண்ட பிரம்மாண்ட கட்டடம் பென்டகன். இதனாலேயே இந்தக் கட்டடம் இப்பெயர் பெற்றது.
அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசியே பென்டகனின் ஐந்து பகுதிகளில் ஒரு பகுதிக்குள் அடங்கிவிடும். அந்த அளவு பெரிய கட்டடம் பென்டகன்..!
இதனுள் 40 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பென்டகன் நிர்வாகம் அமெரிக்க ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது.
உலகின் சக்திவாய்ந்த ராணுவமான அமெரிக்க ராணுவம் தனது ரகசியக் கோப்புகள் மற்றும் ஆயுதங்களை பென்டகன் கட்டடத்தின் உள்ளே பாதுகாக்கிறது.
அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்து பென்டகன் உடன் நேரடித் தொடர்பில் இருப்பார்.
பென்டகன் உள்ளே அனுமதியுடன் சுற்றுலா செல்லலாம். ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே சுற்றுலா செல்பவரால் பார்க்க முடியும். பல இடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பென்டகன் சுற்றுலாப் பயணி பயங்கரவாதியாக இருந்துவிடக் கூடாது என்பதால் இவர்களது பின்னணி குறித்த தகவல்களை பென்டகன் அதிகாரிகள் மிகக் கறாராக சோதனை செய்வர்.
1941 ஆம் ஆண்டு பிரிகேடியர் ஜெனரல் பிரஹோன் சோமர்வெல் மூன்றே நாட்களில் பென்டகன் புளூ பிரின்ட்டை தயார் செய்தார். ஜூலை 17 ஆம் தேதி பென்டகன் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கின.
பென்டகன் கட்டடத்தில் வெளியே உள்ள பல ஏக்கர் பார்கிங் பகுதியில் தினமும் 10 ஆயிரம் கார்கள் நிற்கும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்த பார்கிங் பகுதியில் கார்கள் வந்து போன வண்ணமே இருக்கும்.
24 மணிநேரமும் பென்டகன் ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். எனவே ஆண்டு முழுவதும் இங்கு ஊழியர்கள் கூட்டம் குறையவே வாய்ப்பில்லை.
பென்டகன் உள்ளே கருப்பின மற்றும் வெள்ளை இனப் பணியாளர்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் இருந்தன.
முன்னாள் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இந்த நிறப் பாகுபாட்டை எதிர்த்து கழிப்பறையை அனைவரும் பாகுபாடின்றிப் பயன்படுத்த வழிவகை செய்தார்.
2001 ஆம் ஆண்டு செப்.,11 ஆம் தேதி பென்டகனின் 60-வது ஆண்டு விழாவின்போது அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த விமானத் தாக்குதலில் 200 ஊழியர்கள் உயிர் நீத்தனர். இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு ஐந்து பில்லியன் டாலர் செலவில் பென்டகன் கட்டடத்தைச் சுற்றி வெடித் தாக்குதலைத் தாங்கும் அளவுக்கு உறுதியான நவீன கட்டுமானம் அமைக்கப்பட்டது.
35 எக்கர் பரப்பளவில் ஐந்து கோணங்கள் கொண்ட பிரம்மாண்ட கட்டடம் பென்டகன். இதனாலேயே இந்தக் கட்டடம் இப்பெயர் பெற்றது.
அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசியே பென்டகனின் ஐந்து பகுதிகளில் ஒரு பகுதிக்குள் அடங்கிவிடும். அந்த அளவு பெரிய கட்டடம் பென்டகன்..!
இதனுள் 40 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பென்டகன் நிர்வாகம் அமெரிக்க ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது.
உலகின் சக்திவாய்ந்த ராணுவமான அமெரிக்க ராணுவம் தனது ரகசியக் கோப்புகள் மற்றும் ஆயுதங்களை பென்டகன் கட்டடத்தின் உள்ளே பாதுகாக்கிறது.

அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்து பென்டகன் உடன் நேரடித் தொடர்பில் இருப்பார்.
பென்டகன் உள்ளே அனுமதியுடன் சுற்றுலா செல்லலாம். ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே சுற்றுலா செல்பவரால் பார்க்க முடியும். பல இடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பென்டகன் சுற்றுலாப் பயணி பயங்கரவாதியாக இருந்துவிடக் கூடாது என்பதால் இவர்களது பின்னணி குறித்த தகவல்களை பென்டகன் அதிகாரிகள் மிகக் கறாராக சோதனை செய்வர்.

1941 ஆம் ஆண்டு பிரிகேடியர் ஜெனரல் பிரஹோன் சோமர்வெல் மூன்றே நாட்களில் பென்டகன் புளூ பிரின்ட்டை தயார் செய்தார். ஜூலை 17 ஆம் தேதி பென்டகன் கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கின.
பென்டகன் கட்டடத்தில் வெளியே உள்ள பல ஏக்கர் பார்கிங் பகுதியில் தினமும் 10 ஆயிரம் கார்கள் நிற்கும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய இந்த பார்கிங் பகுதியில் கார்கள் வந்து போன வண்ணமே இருக்கும்.
24 மணிநேரமும் பென்டகன் ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். எனவே ஆண்டு முழுவதும் இங்கு ஊழியர்கள் கூட்டம் குறையவே வாய்ப்பில்லை.
பென்டகன் உள்ளே கருப்பின மற்றும் வெள்ளை இனப் பணியாளர்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் இருந்தன.
முன்னாள் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இந்த நிறப் பாகுபாட்டை எதிர்த்து கழிப்பறையை அனைவரும் பாகுபாடின்றிப் பயன்படுத்த வழிவகை செய்தார்.

2001 ஆம் ஆண்டு செப்.,11 ஆம் தேதி பென்டகனின் 60-வது ஆண்டு விழாவின்போது அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த விமானத் தாக்குதலில் 200 ஊழியர்கள் உயிர் நீத்தனர். இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு ஐந்து பில்லியன் டாலர் செலவில் பென்டகன் கட்டடத்தைச் சுற்றி வெடித் தாக்குதலைத் தாங்கும் அளவுக்கு உறுதியான நவீன கட்டுமானம் அமைக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!