நாட்டிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது தவறு: ராகுலுக்கு அமித்ஷா அட்வைஸ்
ஆமதாபாத்: வெளிநாடு சென்று நாட்டு அரசியலைப் பற்றி விவாதிப்பது தவறு. இதை மக்கள் கவனித்து வருகின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மோடி அரசின் ஒன்பது ஆண்டு நிறைவை முன்னிட்டு குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ள சித்பூர் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தேசபக்தியுள்ள எந்தவொரு நபரும் இந்திய அரசியலை இந்தியாவிற்குள்ளேயே விவாதிக்க வேண்டும். வெளிநாடு சென்று நாட்டு அரசியலைப் பற்றி விவாதிப்பது தவறு.
இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல். நாட்டு மக்கள் இதை உன்னிப்பாகப் கவனித்து வருகின்றனர். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் கனவை நிறைவேற்றியுள்ளார். பாஜ., ஆட்சி காலத்தில் நடுத்தர மக்களின் நிதிநிலை வேகமாக வளர்ந்து வருகிறது.

பிரதமர் பல புதிய கல்வி நிலையங்களை திறந்தும், மானிய விலையில் வீடுகளை வழங்கியும், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியும் அவர்களது கனவுகளை நனவாக்கியுள்ளார். மலிவு விலையில் கிடைக்கும் மருந்துகள் முதல் மலிவான பயணங்கள் வரை, பிரதமர் மோடி நடுத்தர வர்க்கத்தினரை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (15)
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல்....நீங்கள் கூறும் அறிவுரையாய் கேஆட்கும் நிலயில் இல்லை. அவர் கூறுவதை தான் மற்றவர்கள் கேட்டக்க வேண்டும் .அவர் தான் ஒரு இளவரசர் என்ற நினைப்புதான் உலகம் சுத்தும் அம்பி
என்னதான் பாஜகமீது ஒரு குற்றவுணர்ச்சி இருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று அங்கு இந்தியாவை பற்றி தரைகுறைவாக பேசுவதும், இந்தியா பிரதமரை பற்றி பேசுவதும் மிக மிக அநாகரீகமான ஒரு செயல். 'நாகரீகம்". அப்படி என்றால் என்ன, எங்கு கிடைக்கும், எவ்வள்வு விலை? என்று கேட்பவர்கள் காங்கிரஸ் கட்சியினர்.
சுதந்திர இந்தியாவில் யாரும் செய்யாததை ராகுல் செயகிறார். மோடி வெறுப்பு அவ்வளவு தூரம் ஊறி போயிருக்கிறது. இந்த கூத்து வேறு எந்த நாட்டிலும் காணமுடியாது. கட்சி சீனாவோடு ஒப்பந்தம் போடுகிறது. தலைவரோ இன்றைய அரசு தலைவர் பற்றி லண்டன் நியூயார்க் வாஷிங்டனில் விமர்சனம். தனது கட்சி மட்டுமே ஆட்சிக்கு தகுதி என நினைக்கும் மனநிலையை என்ன சொல்வது.அமெரிக்கா பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் இப்படி நடந்து கொள்வதில்லை. முதிர்ச்சி இல்ல நிலை வெட்ட வெளிச்சம்.
அமித்ஷா ஜி, சமூக வலைதளங்களில் பரவிவரும் பல விஷயங்களை விட்டுவிட்டிர்களே. அமெரிக்க அமைதி மார்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு ராகுல் சிறப்பு விருந்தினராக சென்று, இந்தியாவை பற்றி தரம் தாழ்ந்த சொற்பொழிவுகள், பந்தி போஜனம், 2024 தேர்தலுக்கான பேச்சு வார்த்தைகள், பேரங்கள் என பல நடந்துள்ளதாக கடைக்கோடி இந்தியனுக்கும் தெரியுதே! உங்களுக்கு தெரியாதா?
Where Rahul critisised India. He critisised Modi only. Modi critisism will not amount to critrism of India.