இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். புதுச்சேரி சார்பாக தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்கும்போது, தமிழகப் பள்ளி மாணவர்கள் அணியைத் தேர்வு செய்யாத பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. 2023-2024 ஆண்டுக்கு, ரூ.3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் பொறுப்பற்ற இந்தச் செயலை, தமிழக பா.ஜ., சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (28)
பிஜேபியினாலேயே இவர் ஒருநாள் சிறைக்கு போவார். குறித்து வைத்துக்கொள்ளுங்கள .
இந்த சாராயக் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது..
திரு அண்ணாமலை உண்மையை உரக்க சொல்கிறார். அதனால உபிஸ்களுக்கு எரிகிறது. அதான் விளையாட்டு துறைக்கே தனியாக ஒரு அமைச்சரே இருக்கிறாரே. அவர் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பாரா என்பதே கேள்வி
முதலில் அண்ணாமலைக்கு புரிதல் குறைவு. ஒரு முழுமையற்றவர். கற்றக் கல்வியையும் பதவியை யும் பயன் படுத்த தெரியாத ஒருவர் அரைவேக்காடாய் உளரிக்கொண்டிருக்கிறார். நாட்டிற்கு பெருமை சேர்த்த போராடிக்கொண்டிருக்கும் விராங்கனைகளுக்காக ஆதரவாக ஒரு குரலாவது கொடுத்தாரா அல்லது சமீபத்தில் நடந்த நாட்டையே உலுக்கிய ரயில் விபத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டாரா? Simply a cheap politician. He is a set back for BJP in particular to Tamilnadu.
தேசிய விளையாட்டு போட்டிக்குப் போகாட்டி என்ன குறைந்துவிட்டது?