தினமலர்

இந்த நிலையில், கடந்த ஜூன் 1ம் தேதி கோவையில் சட்டவிரோத விளம்பர பலகையை சாலையோரம் நிறுவியபோது சாரம் சரிந்து, தொழிலாளர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பான செய்தியும் நமது 'தினமலர்' நாளிதழ் மற்றும் இணையதளத்தில் செய்தி வெளியானது.
இதனையடுத்து விளம்பர பலகைகள், பேனர் போன்றவைகளை நிறுவ கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும், மீறி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தன. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி இனி, திருத்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் பேனர் வைக்க முடியாது.

சிறை - அபராதம்
அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பேனர், விளம்பர பலகைகள் வைப்பதில் விதிகளை மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். உரிமக்காலம் முடிந்த பின்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் உள்ளிட்டவற்றால் உயிரிழப்பு நேர்ந்தால் அதனை வைத்த நிறுவனம் அல்லது தனிநபர்தான் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (18)
அதிமுக ஆட்சியில் பேனர் மரணங்கள் நிகழ்ந்த போது கோர்ட்டில் பிரமாணம் எடுத்தவர்கள் இவர்கள் இன்று நாலடிக்கு ஒரு பேனர் வைக்கிறார்கள் இறந்த ஏழை உயிர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்? அனுமதி தானே , கட்சி பேரைக் கேட்டதும் கிடைத்துவிடும் சும்மா நாடகம் அவ்வளவுதான்
பேனர் வைக்குறதே நீங்கதான்.. என்னங்கடா இந்த சித்து விளையாட்டு..
இந்த அறிவுப்பு பேனருக்கு மட்டுமா? சுவரொட்டிக்கு கிடையாதா ? புதிதாக கட்டிடம், பாலம், பேருந்து நிறுத்த குடை, இப்படி ஏதாவது கட்டினால் சுவர்களில் போஸ்டர் அடித்து ஒட்டிவிடுகிறார்கள். நெடுஞ்சாலைகளில் சென்டர் மீடியனில் இருக்கும் சுவர்களில் இருபுறமும் இப்படி ஏதாவது சுவரொட்டி ஓட்டுகிறார்கள். இதை அரசு தடுக்க வேண்டும்.
எல்லாம் வெறும் வெத்து அறிவிப்போடு சரி. கேட்டு கேட்டு புளித்து விட்டது. இனியும் இந்த மாதிரி அறிவிப்புகளை விடுத்து நடைமுறையில் சாதித்து காட்ட கொள்ளுங்கள்
Chennai Pallavaram adutha Pammalil Koil Thiruvizha yra peyaril 10 naatkaluku munbagave yeralamana Flex Bannergalum Postergalum vaipavargal meethu Tambaram Corporation Nadavadikai yedukatha?