Load Image
Advertisement

கனிம வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

Latest Tamil News


சென்னை: தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கனிமவளத்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், நிர்மல்ராஜ் புதிய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:



∗ கனிம வளத்துறை செயலாளராக இருந்த ஜெயகாந்தன், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஊழல் பேர்வழிகளுக்கு துணைபுரிந்தது, திருப்பூர் உதவி இயக்குநர் வள்ளலை மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தியது போன்ற நடவடிக்கை காரணமாக அவர், சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

∗ போக்குவரத்து துறை செயலாளராக இருந்த நிர்மல் ராஜ், கனிமவளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Latest Tamil News
இவர்களை தவிர்த்து.

∗ கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், போக்குவரத்துத் துறை கமிஷனராகவும்

∗ சமூக நலத்துறை மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் ரத்னா, மதுவிலக்கு மற்றும் கலால் துறை இயக்குநராகவும்

∗ ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஆணைய கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி கமிஷனராகவும்,

∗ மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராகவும்,

∗ சேலம் மாவட்ட கிராமப்புற மேலாண் ஆணைய கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், சேலம் மாநகராட்சி கமிஷனராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

∗ இயற்கை வளங்கள் துறைக்கு கூடுதல் தலைமை செயலாளர் என்ற தற்காலிக பதவி உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் தலைமை செயலாளர் அந்தஸ்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ள இந்த பதவி, ஒராண்டிற்கு மட்டும் அமலில் இருக்கும். இந்த துறைக்கு, போக்குவரத்து துறையின் கூடுதல் செயலாளராக இருக்கும் பணீந்திர ரெட்டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


வாசகர் கருத்து (4)

  • jayvee - chennai,இந்தியா

    வண்டி ஓடாமல் லைசென்ஸ் வாங்கும் முறை தமிழகத்தில் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளதா ? நீங்கள் ஓட்டுநர் பள்ளிகள் மூலமாக வந்தால் வெறும் ஆயிரம் ருபாய் கொடுத்தால் வண்டி ஓட்டிக்காட்டாமலே வெறும் கூடுதல் லஞ்சமாக ருபாய் ஆயிரம் கொடுத்தால் போதும்.. இது KK நகர் RTO சட்டம் .. மேலும் குறைந்த பட்சம் ருபாய் ஐநூறு கூடுதலாக கொடுக்கவேண்டும்.. ஒழுங்காக ஓட்டினாலும் . ஓட்டுநர் பள்ளிமூலம் வந்தாலும் சரி.. இதுதான் புதிய சட்டம்

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    திரு நிர்மல் ராஜ் அவர்கள் போக்குவரத்து துறையில் இருந்தபோது மோட்டார் வாகனங்கள் பதிவு முறையில் Computerised Random tem கொண்டு வந்தார். அதன் படி 8 என்கிற கூட்டுத்தொகை எண் வராதபடி மென்பொருளை கொண்டுவந்தார். RTO office ஊழியர்கள், தரகர்கள் ஆகியோர் வருமானத்தை ஒழித்தார்.

  • ஆரூர் ரங் -

    திறமையான மூத்த ஐஏஎஸ் அதிகாரியை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கமிஷனர் பதவிக்கே அனுப்ப பட்டுள்ளது

  • அப்புசாமி -

    எல்லாரையும் சரியான இடத்துக்கு மாற்ற வேண்டும்..ஊழல் தடுக்கப்படும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்