Load Image
Advertisement

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Chance of heavy rain in 9 districts    9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ADVERTISEMENT


சென்னை : 'தமிழகம் முழுதும் ஒன்பது மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:



நேற்று மாலை நிலவரப்படி, மதுரை விமான நிலையத்தில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது, 106 டிகிரி பாரன்ஹீட். தமிழகம், புதுச்சேரியில் நேற்று, 18 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவியது.

சென்னை நுங்கம்பாக்கம், கடலுார், மதுரை, நாகை, புதுச்சேரி, 40; மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, பரங்கிப் பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்துார், 39; காரைக்கால், நாமக்கல், திருச்சி, திருத்தணி, வேலுார், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

Latest Tamil News
நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பெருந்துறையில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யலாம்.

மன்னார் வளைகுடா, தெற்கு கடலோர பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, 7ம் தேதி வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • குமரி குருவி -

    மழை பெய்யுமாம்வெயில் மிரட்டுமாம்..எதை நம்ப

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்