Load Image
Advertisement

3டி அச்சு தொழில்நுட்பத்தில் உலகின் முதல் கோவில்

Worlds first temple in 3D printing technology   3டி அச்சு தொழில்நுட்பத்தில் உலகின் முதல் கோவில்
ADVERTISEMENT
ஹைதராபாத்: '3டி' எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் அச்சடிக்கும், உலகின் முதல் ஹிந்து கோவில் தெலுங்கானாவில் அமைகிறது.

கட்டுமானப் பணிகளில், முப்பரிமாண அச்சு என்ற நவீன முறை தற்போது பிரபலமாகி வருகிறது. கம்ப்யூட்டரில் முப்பரிமாணத்தில் கட்டடத்தின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. அதை சிறப்பு இயந்திரம் வாயிலாக அச்சடிக்கும் வகையில் கட்டுமானப் பணி நடக்கிறது.

இந்த தொழில்நுட்பத்தால் மிகக் குறுகிய காலத்தில் கட்டடம் கட்ட முடியும். மேலும், செலவும் குறைவு. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உலகின் முதல் ஹிந்து கோவில், தெலுங்கானாவின் சித்திபட் மாவட்டத்தின் புருகுபல்லியில் கட்டப்படுகிறது. அங்குள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், 3,800 சதுர அடியில் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.
Latest Tamil News
விநாயகருக்காக கொழுக் கட்டை வடிவிலும், சிவனுக்காக சிவலிங்கம் வடிவிலும், பார்வதிக்காக தாமரை வடிவிலும் இந்தக் கோவில் அமைய உள்ளது. 'சிம்ப்ளிபோர்ஜ் கிரியேஷன்ஸ்' என்ற 3டி தொழில்நுட்ப அச்சு தொழிலில் ஈடுபட்டு உள்ள நிறுவனம், இந்தக் கோவிலை கட்டுகிறது.


வாசகர் கருத்து (2)

  • jayvee - chennai,இந்தியா

    ஹிந்து கோவில்களில் ஒரு உயிரோட்டம் இருக்கும்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    உடல் உழைப்பில் உருவானால் அதற்கு மதிப்பிருக்கும் - இல்லை என்றால் ஒரு செயற்கையாகவே உணரப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்