Load Image
Advertisement

உதயநிதி அறக்கட்டளைக்கு அசையா சொத்து இல்லை

சென்னை:'உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்குச் சொந்தமாக, அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை' என, அதன் நிர்வாகி கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மேலாளர் பி.கே.பாபு அறிக்கை:-

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டு, கல்வி, மருத்துவ உதவிகள் செய்து வருகிறது.

பெற்றுள்ள நன்கொடை, செய்துள்ள நலப் பணிகளுக்கான வரவு - செலவு கணக்குகளை, முறையாக வருமான வரித் துறையிடம் சமர்ப்பித்து உள்ளது.

அமலாக்கத் துறையின், 'டுவிட்டர்' பக்கத்தில், கடந்த 27ம் தேதி வந்த பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. அறக்கட்டளைக்கு எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது.

மேலும், அமலாக்கத் துறையின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும், 36 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அமலாக்கத் துறை முடக்கிய, 34 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களை கொடுத்து, அதை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement