Load Image
Advertisement

புதிய பார்லி., திறப்பு விழா: தமிழக செங்கோல் நிறுவல்

புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று(மே 28) காலை 7.30 மணிக்கு தமிழக பாரம்பரிய நாதஸ்வர இசையுடன் பூஜை நடைபெற்றது. பூஜையில் பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா துணைத்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக ஆதினங்கள்21 பேர் பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கினர். இவர்கள் அளித்த செங்கோலை பெற்று சபாநாயாகர் இருக்கை அருகே வைத்தார். முன்னதாக செங்கோலை நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்து பிரதமர் வணங்கினார். நிகழ்ச்சிகள் தமிழிலும், இந்தியிலும் தொகுப்பாளர்கள் வழங்கினர்.


Latest Tamil News


65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பார்லி., கட்டடத்தின் கட்டுமானம் 2021 ஜனவரியில் துவங்கியது. இது ரூ.1250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டடத்தில் அமைந்துள்ள லோக்சபாவில் 888 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 384 எம்.பி.க்களும் அமர முடியும்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News


பார்லிமென்ட் கூட்டு அமர்வில் 1272 உறுப்பினர்கள் அமர்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. லோக்சபாவின் வடிவமைப்பு தேசிய பறவையான மயில் மற்றும் ராஜ்யசபாவின் வடிவமைப்பு தேசிய மலர் தாமரையின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. இந்நிலையில், புதிய பார்லிமென்ட் திறப்பு விழா நிகழ்ச்சிகள், இன்று(மே 28) காலை 7:30 மணிக்கு பார்லிமென்ட வளாகத்திற்கு வெளியே காந்தி சிலை அருகே ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன.



நிகழ்ச்சியில் போது, ஆதினங்கள் பிரதமர் மோடியிடம் தமிழக செங்கோலை கொடுத்தனர். இதையடுத்து பிரதமர் மோடி செங்கோல் முன் தலை வணங்கினார். பூஜையின் போது, ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.



முன்னதாக பிரதமர் மோடி பார்லிமென்ட் வளாகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதினத்தால் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட செங்கோலை, பிரதமர் மோடி காலை 8.30 மணிக்கு மேல் லோக்சபாவில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார்.




12 மத தலைவர்கள் சிறப்பு பூஜை!

புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அனைத்து மத பிரார்த்தனைகள் நடந்தது. அப்போது, ஹிந்து, கிறிஸ்டின், இஸ்லாம், புத்தம் சீக்கியம், உள்ளிட்ட 12 மத தலைவர்கள் தங்கள் வழிபடும் கடவுளை நினைத்து அவரவர் பாணியில் சிறப்பு வழிப்பாடு நடத்தினர். விழாவில் தமிழக தேவார பாடல்கள் பாடப்பட்டது. வந்தே மாதரம் பாடல் நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது.இதனை பிரதமர் ரசித்து கேட்டார், கலைஞர்களையும் பாராட்டினார்.



வாசகர் கருத்து (49)

  • பேசும் தமிழன் -

    ஆதினாகர்தர்கள் ....சங்கராச்சாரியார்கள் .....மடாதிபதிகள் ... இந்து மக்களிடம் பிரசாரம் செய்ய தொடங்க வேண்டும் ....யார் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்..... இந்து விரோத திமுக மற்றும் அதன் அல்லக்கைகள் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டும்.

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    இன்று டில்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாமே ...

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Cheap Publicity....

  • தமிழன் - Chennai ,இந்தியா

    புதிய சட்ட மன்ற கட்டிடத்தை திராவிட ஆட்சி காலத்தில் கலைஞர் தலைமயிலான திமுக ஆட்சியில் ஓமந்தூர் வளாகத்தில் தொடங்கி வைத்தார் அதை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.. திராவிட சிந்தனையே முன்னோடி என்ற அடிப்படையில் அதை பார்த்து இன்று பிரதமர் இந்த நிகழ்ச்சியை அமைத்து இருக்கிறார்கள்.. திராவிடர்களே முன்னோடி, இந்தியாவுக்கு வழிகாட்டி என்பதை இது காட்டுகிறது அல்லவா

  • Abhivadaye - Salem,இந்தியா

    கலைஞர் ஏற்கனவே செங்கோல் பற்றி நெஞ்சுக்கு நீதியில் சொல்லியிருக்கார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement