ADVERTISEMENT
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி அருகே பாப்பம்பட்டி திருமூர்த்தி 28. இவரது மனைவி மாலதி 24.
இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்றிரவு கணவன், மனைவியிடையே வீட்டில் தகராறு ஏற்பட்டது. திருமூர்த்தி அருகில் இருந்த கல்லை எடுத்து மனைவி தலையில் போட்டதில் சம்பவயிடத்தில் இறந்தார். பின் திருமூர்த்தி, குழந்தைகளுடன் தப்பி விட்டார். அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!