இன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றம்
மதுரை : மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் ஐஸ்வர்யம் டிரஸ்ட், புன்னகை பூக்கள் சிறப்பு குழந்தைகள் மையம் சார்பில் இன்று(மே 27) மாலை 6:00 மணிக்கு பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது.
ஆதரவற்ற நோயாளிகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் இப்பட்டிமன்றத்தில் இன்றைய தலைமுறையின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதா, பெற்றோரை பராமரிப்பதா என்ற தலைப்பில் ராஜா உள்ளிட்டோர் பேசுகின்றனர். ஊடக உதவியை தினமலர் வழங்குகிறது. டிக்கெட் முன்பதிவுக்கு 75400 50088, 84385 72747 ல் தொடர்பு கொள்ளலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!