ADVERTISEMENT
சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர்நாயக்கன்பட்டி அருகே வெற்றிலையூரணி பெரிய கண்மாய்க்கு செல்லும் ஓடையில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளதால் மழை நீர் செல்ல வழி இல்லை. மேலும் கழிவுநீரும் ஒரே இடத்தில் தேங்கியுள்ளது
வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி பெரிய கண்மாயை நம்பி அப்பகுதியில் சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது. மேலும் இப்பகுதியினருக்கு குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.
இந்த கண்மாய்க்கு விளாம்பட்டி, கிச்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி பேர்நாயக்கன்பட்டி ஓடை வழியாக தண்ணீர் வரும். ஆனால் ஓடை துார்வாரி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
தற்போது ஓடை முழுவதுமே முட்புதற்கள், சீமை கருவேல மரங்கள்நிறைந்துள்ளது. இதனால் மழை பெய்தாலும் ஓடையில் தண்ணீர் வர வழி இல்லை. மேலும் கழிவு நீரும் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
எனவே ஓடையை முழுவதுமாக துார்வாரி வெற்றிலையூரணி பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!