Load Image
Advertisement

கரூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை

கரூர்,-கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,
மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு, சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளை வரை, மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
இருப்பினும், கரூர் மாவட்டத்திலும், பல இடங்
களிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது, மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை, 5:30 முதல், 5:45 மணி வரை கரூர் நகர், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், வெள்ளியணை, தான் தோன்றிமலை, அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
அக்னி நட்சத்திர காலம் வரும், 29ல் நிறைவு பெறுகிறது. ஆனால், வெயிலின் தாக்கம் குறையவில்லை. இந்நிலையில், நேற்று மாலை பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement