Load Image
Advertisement

மேட்டுத்திருக்காம்புலியூரில் வரும் முன் காப்போம் முகாம்

கிருஷ்ணராயபுரம்,-மேட்டுத்திருக்காம்புலியூரில், வரும்முன் காப்போம் மருத்துவ சிறப்பு முகாம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
பஞ்சப்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை வட்டார தலைமை மருத்துவ அலுவலர் நிறைமதி தலைமை வகித்தார்.
பொது மருத்துவம், கண் மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், சித்த மருத்துவம், இயன்முறை மருத்துவம், தோல் பரிசோதனை, தாய்சேல நல பிரிவு, குடும்ப நல பிரிவு, உள்பட பல மருத்துவ பரிசோதனைகள் பார்க்கப்பட்டன.
டாக்டர்கள் சமீரா, கங்கா தேவி, விஜய், பார்த்திபன், ேஹமராஜ், ஈஸ்வரமூர்த்தி, சுகப்பிரியா, சுதா, சொக்கலிங்கம், ரேணுகா மற்றும் கிருஷ்ணராயபுரம் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், திருக்காம்புலியூரை பஞ்சாயத்து தலைவர் கார்த்திக், மருத்துவ செவிலியர்கள், பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement