வீட்டு மனை பட்டா கோரி ஜமாபந்தி முகாமில் மனு
காங்கேயம்,-காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில், வெள்ளகோவில் உள் வட்ட பகுதி கிராமங்களுக்கு, நேற்று ஜமாபந்தி முகாம் நடந்தது. இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் பகுதியில், 2007ல் நிலமெடுப்பு செய்து, 61 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாத, 20 நபர்களின் பட்டா ரத்து செய்யப்பட்டும், வெளியூர் நபர்களை சேர்ந்த சொந்த வீடு இருக்கும் பலருக்கும் பட்டா வழங்கப்பட்டதை ரத்து செய்யவும், பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. உப்புபாளையம் பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும்.
மேலும், வேலம்பாளையம் பகுதியில், நில உச்சவரம்பு பூமியில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வீடு கட்டி, 50 ஆண்டுகளாக வசிக்கின்றனர். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. சொந்த வீடில்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும், பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நிலத்தை அளந்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். அவருடன், 60க்கும் மேற்பட்ட பெண்களும் வந்திருந்தனர்.
மேலும், வேலம்பாளையம் பகுதியில், நில உச்சவரம்பு பூமியில், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வீடு கட்டி, 50 ஆண்டுகளாக வசிக்கின்றனர். இவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. சொந்த வீடில்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும், பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நிலத்தை அளந்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். அவருடன், 60க்கும் மேற்பட்ட பெண்களும் வந்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!