வர்ணீஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டுகோள்
அரூர்,-அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், மிகவும் பழமையான வர்ணீஸ்வரர் கோவில் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
போரில், ராவணனை வதம் செய்து விட்டு வந்த ராமன், அயோத்திக்கு செல்லும் வழியில், இக்கோவில் அருகில் உள்ள வர்ணதீர்த்தம் என்ற குளத்தில் நீராடி விட்டு, தீர்த்தமலைக்கு சென்றதாக வரலாறு கூறுகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் முறையாக பராமரிக்கப்படாததால், கூரைகள் மற்றும் பக்கவாட்டில் விரிசல்கள் ஏற்பட்டு மிகவும், சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், கோவில் அருகில் சாக்கடை நீர் தேங்கியுள்ளதுடன், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீர், இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
போரில், ராவணனை வதம் செய்து விட்டு வந்த ராமன், அயோத்திக்கு செல்லும் வழியில், இக்கோவில் அருகில் உள்ள வர்ணதீர்த்தம் என்ற குளத்தில் நீராடி விட்டு, தீர்த்தமலைக்கு சென்றதாக வரலாறு கூறுகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் முறையாக பராமரிக்கப்படாததால், கூரைகள் மற்றும் பக்கவாட்டில் விரிசல்கள் ஏற்பட்டு மிகவும், சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், கோவில் அருகில் சாக்கடை நீர் தேங்கியுள்ளதுடன், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீர், இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!