Load Image
Advertisement

பேச்சி அம்மன் கோவிலில் ஜூன் 1ல் கும்பாபிேஷகம்

திருப்பூர்:திருப்பூர், நல்லுார் கிராமம், மணியகாரம்பாளையம் நொய்யல் நதிக்கரையில் பேச்சி அம்மன் கல்ஹார கோவில் உள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேகம் வரும், 1ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் கிராமசாந்தியுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது.

நேற்று மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, மஹாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், இன்று வாஸ்து சாந்தி, பிரவேசபலி, நாளை மங்கள இசை, கோ பூஜை, அஸ்வபூஜை, 28ம் தேதி முளைப்பாரி அழைத்து வருதல், அக்னி சங்கிரஹனம்.

விழாவில், வரும், 29ம் தேதி முளைப்பாரி இடுதல், காப்பு கட்டுதல், முதற்காலயாக வேள்வி, 30ம் தேதி, இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை, மற்றும் 31ல் நான்காம், ஐந்தாம் கால யாகம் நடக்கிறது. அதன்பின், 1ம் தேதி காலை, கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement