Load Image
Advertisement

தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வரும் 30ம் தேதி துவங்குகிறது.

தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,), பி.பி.ஏ., பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் ஆகிய ஆறு பாடப்பிரிவுகள் உள்ளது.

இந்தாண்டு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, வரும், 30ம் தேதி நடக்கிறது. வரும், ஜூன் 5ம் தேதி, பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,), பி.பி.ஏ., பி.ஏ., (பொருளாதாரம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, பொதுப்பிரிவினருக்கும், ஜூன், 8ம் தேதி, பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் பாடப்பிரிவுகளுக்கு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வும் நடக்கவுள்ளதாக, கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement