Load Image
Advertisement

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை:கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. விவசாயிகள், தங்களது குறைகளை மனுவாக கொடுத்தனர். மாவட்ட அளவிலான பொது பிரச்னைகளை, சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் பேசினர்.

அனைவரின் கருத்துக்களையும், கலெக்டர் கிராந்திகுமார் பொறுமையாக கேட்டு, தீர்வு ஏற்படுத்த வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக குறிப்பெடுத்தார். சில அதிகாரிகளுக்கு, என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென, உடனுக்குடன் அறிவுரை வழங்கினார்.

கூட்டம் நிறைவடைய இருந்த நேரத்தில், வேறொரு அலுவல் பணிக்காக, கலெக்டர் புறப்பட்டுச் சென்றார். மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைகள்) செல்வசுரபி, கூட்டத்தை தொடர்ந்து நடத்தினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement