Load Image
Advertisement

புதுச்சேரியில் 1 முதல் 9 வரை ஆல் பாஸ்!

புதுச்சேரி:புதுச்சேரியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' செய்து பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

'புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு, அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியது.

மேலும், ஒன்பதாம் வகுப்பை பொறுத்தவரை, ஆண்டு இறுதி தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும், 35 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளதை கவனத்தில் கொண்டு தேர்ச்சி அளிக்க வேண்டும்.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, தேர்வு முடிவு வெளியிடும் முன் பள்ளி ஆய்வாளர்களின் பார்வைக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெற உத்தரவிடப்பட்டிருந்தது.

அதையொட்டி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடும் பணியில் பள்ளிகள் முழு வீச்சில் இறங்கின.

அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு எழுதிய அனைவரும் ஆல் பாஸ் என, பள்ளி கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி அறிவித்து உள்ளார்.

நான்காவது ஆண்டு



கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி அளிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக ஒன்பதாம் வகுப்பிற்கு, புதுச்சேரி மாநிலத்தில், 2019 - 20 முதல் தொடர்ந்து நான்காவது ஆண்டாக, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு பேர்?



புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம், 741 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

தற்போதைய ஆல்பாஸ் அறிவிப்பின் மூலம், 1 லட்சத்து, 70 ஆயிரத்து, 891 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement