Load Image
Advertisement

மக்களுக்கு வரி செலுத்திய பஞ்., தலைவி

மூங்கில்துறைப்பட்டு:பொதுமக்கள் கட்ட வேண்டிய வீட்டு வரி, 1.16 லட்சம் ரூபாயை, பஞ்., தலைவி செலுத்தி, அதற்கான ரசீதை உரியவர்களிடம் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுப்பட்டு பஞ்., தலைவியாக சித்ரா தாஸ் உள்ளார். பதவி ஏற்ற காலத்தில் இருந்து, பஞ்.,சில் உள்ள பொதுமக்களுக்கு ஆண்டு தோறும் வீட்டு வரியை அவரே செலுத்தி வருகிறார்.

புதுப்பட்டு பஞ்.,சில் மொத்தம், 1,226 வீடுகள் உள்ளன. இதற்கான வீட்டு வரி ஆண்டுக்கு, 1.16 லட்சம் ரூபாய்.

இந்த ஆண்டிற்கான வீட்டு வரியை கட்டிய சித்ரா தாஸ், அதற்கான ரசீதை ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடம் நேற்று வழங்கினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement