Load Image
Advertisement

சி.ஆர்.பி.எப்., போலீசாரை அழைத்து வராதது ஏன்?

கடந்த, ஏப்., 25 முதல் மே, 1 வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை நடந்த கட்டடங்களுக்கு வெளியே உள்ளூர் போலீசார், பாதுகாப்புக்கு துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டாலும், கட்டட நுழைவு பகுதி, அதிகாரிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சி.ஆர்.பி.எப்., அதிகாரிகள் உடன் சென்று, ஆறு நாள் சோதனையையும் பிரச்னை இன்றி நிறைவு செய்தனர்.

நேற்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக் வீட்டுக்கு, வருமான வரித்துறையினர் மட்டுமே சென்றனர். உள்ளூர் போலீசார் கூட வரவில்லை. தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியபோது, அதிகாரிகள் எங்கும் ஓடவில்லை.

நீண்ட நேரம் எஸ்.பி., அலுவலகத்தில் இருந்துவிட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கரூரில் பிரச்னை எழும் என தெரிந்தும், வருமான வரித்துறை அதிகாரிகள், சி.ஆர்.பி.எப்., போலீசாரை அழைத்து வராமல், உள்ளூர் போலீசாருக்கும் முன் கூட்டியே தகவல் தெரிவிக்காமலும் வந்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement