Load Image
Advertisement

மருத்துவ மாணவர் சேர்க்கை: மத்திய அரசுக்கு எதிர்ப்பு

சென்னை-நாடு முழுதும் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் சேர்த்து, எம்.சி.சி.,யே கவுன்சிலிங் நடத்தும் என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Latest Tamil News

அதில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில அரசுகளின் இடஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படும் என்றும், புதிய நடைமுறையை அமல்படுத்த, மாநில அரசுகள் தங்களின் இடஒதுக்கீட்டு விதிகளை சமர்ப்பிக்குமாறும், மாநில அரசுகளின் சார்பில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
Latest Tamil News
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், 'மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களை, எம்.சி.சி., நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது; தமிழக மருத்துவ கல்வி இயக்கம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது


வாசகர் கருத்து (15)

  • duruvasar - indraprastham,இந்தியா

    மத்திய அரசு இப்படி எந்த பக்கம் போனாலும் கேட் போட்டால் கல்வி தந்தைகளின் வாழ்வாதாரத்திற்க்கு யார் பொறுப்பு. ஏதாவது ஒரு முற்றுகை போராட்டத்திற்க்கு ஏற்பாடு செய்யுங்கப்பா

  • seshadri - chennai,இந்தியா

    இவரை பற்றி கேவலமாக எழுத வேண்டாம். மிக மிக சிறந்த அதிகாரி. இவர் கடலூர் ஆட்சியராக இருந்த பொது நூற்று கணக்கான கிராமங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தார். மிக நேர்மையான அதிகாரி. கேடுகெட்ட மந்திரிகள் இவரை கைப்பாவையாக மாற்றி உள்ளனர். இவர் மத்திய அரசு பணிக்கு சென்றால் நல்ல காரியங்கள் செய்ய முடியும்.

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    நல்லா படிச்சி அவங்க பாட்டுக்கு வாயசைக்க வேண்டியிருக்கே ????

  • Diraviam s - CHENNAI,இந்தியா

    How come, these issues are being raised when the counselling is ready to start ? Can't they plan one year ahead or plan for the next academic year ? With this type of announcements , students career is affected.

    • Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா

      ஆட்சியாளர்கள் சொன்னால் கேட்டுக்கணும் மத்திய மாநில இரண்டும் தான்

  • GMM - KA,இந்தியா

    பொறியியல், மருத்துவம் தேசிய அளவில் இருக்க வேண்டும். அலோபதி வேலை வாய்ப்பு உலகம் முழுவதும். தரமற்ற மருத்துவ மாணவர்களிடம் தவறான சிகிச்சை ஏற்படும். தமிழக சித்த மருத்துவ கல்வி இயக்கம் இருந்தால் போதும். மாநில அரசு ஒதுக்கீடு இடங்களை MCC நடத்த ஏன் அனுமதிக்க முடியாது? மந்திரி மாசு சொல்வதை சிந்திக்காமல் செய்ய clerk போதும். IAS எதற்கு? மாசு எங்கே?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்