Load Image
Advertisement

சவாலுக்கு சவால் விடுவேன்!: பிரதமர் கோபம்

I will challenge the challenge!: Prime Minister angry    சவாலுக்கு சவால் விடுவேன்!: பிரதமர் கோபம்
ADVERTISEMENT
புதுடில்லி : மூன்று நாடுகள் பயணத்தை முடித்து திரும்பிய பிரதமர் மோடிக்கு, புதுடில்லியில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ள எதிர்க்கட்சிகளின் திட்டத்தை விளாசித் தள்ளினார். ''நமக்கு சில சவால்கள் உள்ளன. ஆனால், சவால்களுக்கே சவால் விடுப்பது என் குணம். அதனால், இந்த அரசு எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளது,'' என, அவர் குறிப்பிட்டார்.

கிழக்காசிய நாடான ஜப்பான், பசிபிக் தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து அவர் நேற்று காலை புதுடில்லிக்கு வந்து சேர்ந்தார்.

இதற்கிடையே, பார்லிமென்ட் புதிய வளாகத்தை பிரதமர் மோடி நாளை மறுதினம் திறந்து வைப்பதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, விழாவை புறக்கணிப்பதாக கூறியுள்ளன.

இந்நிலையில், புதுடில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினர் குறித்து நேரடியாக குறிப்பிடாமல், அங்கு குழுமியிருந்த பா.ஜ.,வினர் இடையே பேசியதாவது:

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடந்தது.

இந்நிகழ்ச்சியில், அந்த நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அந்நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதுதான், ஜனநாயகத்தின் ஆன்மா மற்றும் வலிமை. இந்திய வம்சாவளியினர் நிகழ்ச்சியில் கட்சி பாகுபாடு இல்லாமல் அவர்கள் பங்கேற்றது, நமக்கு கிடைத்த கவுரவம்.

வெளிநாடுகளில் நான் மிகவும் தன்னம்பிக்கையுடனும், உறுதியுடனும் பேசுவதற்கு காரணம், நம் நாட்டு மக்கள் பெரும்பான்மை அரசை தேர்வு செய்திருப்பது தான். நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், 140 கோடி மக்களின் குரல் என்பதை உலகத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

நான் உலக நாடுகளுக்கு சென்றபோது, கொரோனா தடுப்பூசி கொடுத்ததற்காக நமக்கு நன்றியை தெரிவித்தனர். ஆனால், கொரோனா தடுப்பூசியை ஏன் மற்ற நாடுகளுக்கு தர வேண்டும் என, இங்கே சிலர் கேள்வி எழுப்பினர்.

இது, புத்தர், காந்தி பிறந்த நாடு. நாம், நம் எதிரிகளுக்கும் நன்மை செய்யக்கூடியவர்கள். பரிவு என்பது நம்முடைய அடையாளம். இந்தியாவின் குரலை உலக நாடுகள் கேட்கின்றன. நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், பெருமைகள் குறித்து பேசுவதற்கு நாம் தயங்க வேண்டியதில்லை. நாம் அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியே வர வேண்டும்.

நமக்கு சில சவால்கள் உள்ளன. ஆனால், சவால்களுக்கே சவால் விடுப்பது என்னுடைய குணம். இந்த அரசு, எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியின் பயணத்துக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து பேசினர்.

வெளுத்து வாங்கிய மோடி



முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ள உத்தரகண்டுக்கு,
முதல் வந்தே பாரத் ரயில் சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. புதுடில்லியில் இருந்து டேராடூன் வரையிலான இந்த ரயில் சேவையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்த நுாற்றாண்டில் நம் உள்கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவதன் வாயிலாக, இந்தியா உலக அரங்கில் சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும். ஆனால், நம் நாட்டில் இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள், ஊழல், மோசடி செய்வதிலேயே கவனம் செலுத்தினர். தங்களுடைய வாரிசுகளை வளர்ப்பதை மட்டுமே நோக்கமாக வைத்திருந்தனர்.

உத்தரகண்டில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கு, 5,000 கோடி ரூபாய் தேவை. இதுவே, 2014க்கு முன் செய்திருந்தால், 200 கோடி ரூபாயில் செய்திருக்கலாம்.

முதல் முறையாக, இந்நாட்டில், உண்மையான நோக்கம், திட்டம், அர்ப்பணிப்புடன் செயல்படக் கூடிய அரசு அமைந்துள்ளது. வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கொரோனாவை எதிர்கொண்டதில் நம் நாட்டின் செயல்பாடுகளை, உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. இது, இந்தியா மீது உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

'காங்., கட்சியினர் தங்கள் மறதியால்மங்கப் போகின்றனர்'



புதிய பார்லி., கட்டடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், டில்லியில் நேற்று மத்திய நகர்ப்புற மேம்பாடு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறியதாவது:
புதிய பார்லி., கட்டடம், நம் நாட்டின் பெருமை மற்றும் கலாசாரம் சம்பந்தப்பட்டது. இதில், அரசியல் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், காங்., வேண்டுமென்றே இதை அரசியலாக்கப் பார்க்கிறது.
காங்., கட்சியினர் நேரில் சந்திக்கும்போது ஒன்றைப் பேசுகின்றனர். வெளியில் போனவுடன், தாங்கள் பேசியதை அப்படியே மாற்றி, வேறு ஒன்றை பேசுகின்றனர். அவர்களுக்கு ஞாபக மறதி இருப்பதாக உணர்கிறேன். இந்த மறதி காரணமாக, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கப் போகின்றனர்.
ஒரு வேளை, அவர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய பார்லி.,யை கட்டிஇருந்தால், அவர்கள் தான் அதை திறந்து வைத்திருப்பர். இப்போது, நாங்கள் ஆட்சிக்கு தலைமை தாங்குகிறோம். எனவே, நாங்கள் திறக்கிறோம். இதில் தவறில்லையே?இந்த வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் தள்ளி நின்றால், இந்தியா, இந்திய நாகரிகம், கலாசாரம், ஜனநாயகம் ஆகியவற்றிலிருந்தும் அவர்கள் தள்ளி நிற்கின்றனர் என்று அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.



செங்கோல் இருக்கும்!'

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று அளித்த பேட்டி:வெள்ளையர் ஆட்சி முடிந்து, நம் மக்கள் கையில் நாடு தரப்பட்டதை தெரிவிப்பதற்காக, 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் செங்கோல் வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், சில ஆண்டுகளுக்கு முன் வரை கண்டறியப்படாமல், அலகாபாதில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தது.இந்த செங்கோல் பற்றி, 1978ல் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பேசினார். இதைத் தொடர்ந்து, 2021ல் செங்கோல் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. இதை கண்டுபிடிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் கடிதம் எழுதினார். இதையடுத்து, அலகாபாதின் ஆனந்த் பவன் அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் எடுத்து வரப்பட்டு, புதிய பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்கப்பட உள்ளது. நீதி மற்றும் நியாயமான ஆட்சியின் புனித சின்னம் தான் செங்கோல். புதிய பார்லி., கட்டடத்தில், செங்கோல் நிறுவப்படுவது தமிழகத்திற்கு பெருமை. இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. அடுத்த 100 ஆண்டுகளுக்கு, நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப் போகிறது. தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காகவாவது, புதிய பார்லி., திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும். இது ஜனநாயகத்தின் கோவில். பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும், பார்லிமென்டுக்கு உரிய மரியாதையை அவர்கள் கொடுக்க வேண்டும்.


புதிய பார்லி.,யை ஜனாதிபதியை வைத்து திறக்கவில்லை என்று விவாதம் எழுகிறது. சமீபத்தில் சத்தீஸ்கரில் புதிய சட்டசபை கட்டடத்தை, காங்., முன்னாள் தலைவர் சோனியா திறந்து வைத்தார். தெலுங்கானாவில் சட்டசபை கட்டட திறப்பு விழாவுக்கு, அம்மாநில கவர்னர் தமிழிசை அழைக்கப்படவில்லை; முதல்வர் தான் திறந்தார். ஆனால், இப்போது மட்டும் விமர்சனம் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.



மங்கப் போகின்றனர்'

புதிய பார்லி., கட்டடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், டில்லியில் நேற்று மத்திய நகர்ப்புற மேம்பாடு அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கூறியதாவது:புதிய பார்லி., கட்டடம், நம் நாட்டின் பெருமை மற்றும் கலாசாரம் சம்பந்தப்பட்டது. இதில், அரசியல் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், காங்., வேண்டுமென்றே இதை அரசியலாக்கப் பார்க்கிறது.காங்., கட்சியினர் நேரில் சந்திக்கும்போது ஒன்றைப் பேசுகின்றனர்.


வெளியில் போனவுடன், தாங்கள் பேசியதை அப்படியே மாற்றி, வேறு ஒன்றை பேசுகின்றனர். அவர்களுக்கு ஞாபக மறதி இருப்பதாக உணர்கிறேன். இந்த மறதி காரணமாக, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கப் போகின்றனர்.ஒரு வேளை, அவர்கள் ஆட்சிக் காலத்தில் புதிய பார்லி.,யை கட்டியிருந்தால், அவர்கள் தான் அதை திறந்து வைத்திருப்பர். இப்போது, நாங்கள் ஆட்சிக்கு தலைமை தாங்குகிறோம். எனவே, நாங்கள் திறக்கிறோம். இதில் தவறில்லையே?இந்த வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் தள்ளி நின்றால், இந்தியா, இந்திய நாகரிகம், கலாசாரம், ஜனநாயகம் ஆகியவற்றிலிருந்தும் அவர்கள் தள்ளி நிற்கின்றனர் என்று அர்த்தம்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (43 + 45)

  • Duruvan - Rishikesh,அன்டார்டிகா

    No need to take so much efforts for tamilan. It is not worth. One quarter & chicken briyani is enough.

  • Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா

    இந்த எதிர்கட்சியை சார்ந்தவர்களை மலத்தால் தான் அடிக்க வேண்டும் . எதையும் மதம் இனம் என்று பேசும் இந்த கீழ்தரமாவர்களை ஆதரிக்கும் மக்களையும் மீடியாக்களையும் என்னாவென்று என்று சொல்ல தெரியவில்லை . இவர்கள் செய்யும் கண்ராவிகளை பார்க்கும் பொது இந்தியர் என்றால் இப்படித்தான் என்று நினைக்க தோன்றுகிறது . மக்களே தயவு செய்து நீங்களும் இந்த படு முட்டாளான அரசியல்வாதிகள் செயல் படாதீர்கள் . இல்லையேல் நிச்சயமாக இந்தியா மற்றொரு இருந்த ஆப்பிரிக்க கன்டமாக மாறும் அவளை நிலை தோறும் . இன்றுவரை இந்தியா பல இன்னல்களை சந்தித்தாலும் இந்தியாவை அசைக்க முடியாததிற்கு காரணம் இறைவன் அருளே .

  • venugopal s -

    நீங்கள் சவால் விட்டு வாயால் வடை சுடுவதில் கைதேர்ந்தவர் என்பது தான் எங்களுக்கு நன்றாகவே தெரியுமே!

  • srinivasan Ramesh -

    jai hind modiji. jai bharat!!jai Hindustan

  • ஆரூர் ரங் -

    1975 இல் பார்லிமென்ட் விரிவாக்க கட்டிடத்தை பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார். அதில் 🤔 அப்போதிருந்த சிறுபான்மையின ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது ஓரங்கட்டப்பட்டார்.

'தமிழ்மொழி இந்தியர்களின் மொழி' - டில்லி திரும்பிய பிரதமர் மோடி பெருமை (45)

  • Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா

    தமிழ் இந்தியர்களின் மொழியென்றால் திருக்குறளை இந்திய நாட்டின் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்கலாமே அனைத்து இந்தியர்களும் அவரவர் தாய்மொழியில் தானே திருக்குறளை படிப்பார்கள். இப்படி சொன்னால் தமிழர்கள் பாஜக வை ஆதரிப்பார்கள், பாஜக நாளை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்குமென்ற நம்பிக்கைதான். நீங்கள் சமஸ்கிருத மொழிக்கு கொடுக்கும் அதேமுக்கியத்துவத்தை மரியாதையை கொஞ்சம் தமிழுக்கும் கொடுங்கள். சமஸ்க்ருத மொழி இந்தோ ஆரிய இனத்தை சேர்ந்த மொழி. தமிழ் திராவிட இனத்தை சேர்ந்தவை. அப்போதுதான் உங்கள் சொல்லிலும் உண்மையுள்ள தென்று மக்கள் நம்புவார்கள்.

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளும் இந்தியர்களுக்கான மொழிகள் தான்.இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது தானே. பாகிஸ்தானில் பேசப்படும் உருதுவும் இந்தியாவில் தோன்றியது தான். பங்களாதேஷில் பேசப்படும் பெங்காலியம் இந்திய மொழி தான் நேபாளி மொழியும் இந்திய மொழி தோற்றம் தான்.இலங்கையில் பேசப்படும் சிங்களமும் இந்திய கலப்பு மொழி தான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தமிழ் தோன்றியது என்றால் மொழியின் பிறப்பிடமே இந்தியா தான்.ஆசிய மொழிகளில் எல்லாம் இந்திய வார்த்தைகள் உள்ளது என்றால், இங்கிருந்து தான் மொழி ஆசிய நாடுகளுக்கு மொழி பயணம் செய்திருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது.

  • முருகன் -

    இதனை வரும் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் சொன்னால் நலம்

  • venugopal s -

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று நீங்கள் சினிமா வசனம் பேசினாலும் உங்களுக்கு ஓட்டு மட்டும் போட மாட்டோம்!

  • ஆரூர் ரங் -

    விடியலுக்கு பப்புவதான் தெரியும். அது என்ன நியூகினி?.😆 விடியலார் வாயில நொழையுறா மாதிரி பேரு வைக்கக்கூடாதா?

  • அப்புசாமி -

    தமிழ் மொழி இந்தியர்கள் மொழி மட்டுமல்ல.இன்னும்.பல்வேறு நாட்டு மக்களின் மொழி, ஆட்சி மொழி கூட. விவரம் தெரிஞ்சவங்களுக்கு தெரியும்.

  • Kumari Thamilan - Nagercoil,இந்தியா

    தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் என்ன ? சமஸ்கிருதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் பத்து சதவீதமாவது தமிழ் மொழிக்கு கொடுக்கவும்.

    • Vijay Srinivasan - Madurai,இந்தியா

      இப்டியே பேசிட்டு உக்காந்துருங்க ஒன்றிய அரசு குன்றிய அரசு apdinu sollikittu. நீஙக enna muyarchi edutheengha தமிழ் naatula . indha varudam pala students thamizhla fail. Engha ethanaperukku oru 100 thirukural theriyum. Naasama போன தமிழ் நாடு .. திராவிடம் pesikittu .. திராவிடம் என்ற வார்த்தையே vada மொழி சொல் .. நீஙக வோட்டே போடா வேண்டாம் , மோடி adutha election ஜெயிக்க போறாரு .. நம்ம கும்மியடிச்சுட்டு, கள்ள சாராயம் kaaichukuttu உக்கரலாம் .. இது தான் சமூக நீதி சூறையாடல்

    • gm - ,

      ptr will be heading a குழு and you will be the member for developing Dumil. wow...super

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Tamil has already minted many millions of Money for the Dravida Model....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Super ....

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    நீங்கள் என்னதான் தமிழைப்பற்றி பெருமையாக பேசினாலும் ஓங்கோல் வாசிகள் பேசும் பேச்சுதான் தமிழ்நாட்டில் சிறப்பாக கருதப்படுகிறது செயல்படுகிறது

  • Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    மோடி உலகமெங்கும் தமிழ் மொழியின் பெருமையை கூறிவருகிறார். பப்புவா நியூ கினியாவில் திருக்குறளை அவர்கள் மொழியில் வெளியிட்டது மிகச்சிறப்பு. தமிழ் மொழி இந்தியர்களின் மொழி என்று மோடி கூறுவது தமிழர்களுக்கெல்லாம் பெருமை

  • duruvasar - indraprastham,இந்தியா

    தமிழ் பற்றாளர் என்றால் அது மிகையாகாது.

  • PR Makudeswaran - Madras,இந்தியா

    அ எங்கள் ஸ்டாலினால் பேசி பார்க்க...... நினைத்து பார்க்கவே முடியாது தானே.

  • Kanagaraj M - Pune,இந்தியா

    ஐயா தமிழ் மொழி இந்தியாவோடமொழிதான் என்பது எங்களுக்கு தெரியும்.

  • venugopal s -

    ஒன்றும் பிரயோஜனம் இல்லையே

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    திரு. மோடியின் தமிழ் பற்று, இங்கு தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் திராவிட கும்பல்களுக்கு வயித்து எரிச்சலை ஏற்படுத்தும் என்பது நடுநிலையாளர்களின் கருத்து. வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை.

  • sridhar - Chennai,இந்தியா

    ஓவரா தமிழை புகழ்வது பிஜேபிக்கு அரசியலில் நல்லதல்ல . வடக்கு தான் பிஜேபியின் வாக்கு வங்கி . தமிழகத்தில் பிஜேபிக்கு ஆதரவு ரொம்ப குறைவு.

    • N. Srinivasan - Chennai,இந்தியா

      ஒட்டு வங்கியை எதிர்பார்த்து பேசுபவர் இல்லை திரு மோடிஜி

    • Soumya - Trichy,இந்தியா

      டுமிழனுங்க என்றாலே ஓசிகோட்டர் கூமுட்டைங்கன்னு உலகத்துக்கே தெரியுமே

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    'தமிழ்மொழி இந்தியர்களின் மொழி' - கரெக்டாக சொன்னார் பிரதமர். இந்தியாவில் இருக்கும் பாக்கிஸ்தான் நாட்டு மற்றும் சீன நாட்டு ஆதரவாளர்களுக்கு ஏற்ற மொழி தமிழ் அல்ல.

  • குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா

    உலக அரங்கில் வெளிநாட்டு அதிபர்களை சந்திக்கும் போது ஆங்கிலத்தில் பேசுனா என்ன குறைந்து போயிடுவார் ?

    • sridhar - Chennai,இந்தியா

      ஸ்டாலினையும் கேளுங்க . ஆங்கிலத்தில் அவர் நகைச்சுவையாய் பேசுவார்.

  • N. Srinivasan - Chennai,இந்தியா

    இதை நாங்கள் எதிர்க்கிறோம்.... எங்கள் தமிழ் மொழி அதை நீங்கள் எப்படி நாடு முழுக்க திணிக்கலாம். பொறுங்கள் எங்கள் தலைவர் வரார் சிங்கப்பூரிலில் இருந்து உங்களை வச்சி செய்வோம்.......

  • Soumya - Trichy,இந்தியா

    மோடி சார் இங்க ஒருத்தே தமிழில் எழுதி கொடுத்த துண்டுசீட்டையே ஒழுங்கா வாசிக்க தெரியாம தமிழ் தமிழ்ன்னு கூவிட்டு திரியிறாங்க

  • Sampath Kumar - chennai,இந்தியா

    தமிழ் மொழி இந்தியர்களின் மொழி ??? அப்போ தமிழை ஆட்சி மொழியக அறிவிக்க வேண்டியது தானே முடியமா ?

  • அப்புசாமி -

    தமிழ் உலகத்துக்கு ஏற்றது, திணிப்புக்கு வேற ஒண்ணு இருக்கு.

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    தமிழ் மேல் எங்கள் கலைஞருக்குத்தான் உரிமை உண்டு .... அதன் பிறகு அவருடைய அரசியல் வாரிசுகளுக்கு அந்த உரிமை உண்டு .... வேறு யாரும் தமிழின் பெயரைச் சொல்லி தமிழர்களின் வாக்குகளைக் குறி வைக்கக் கூடாது ....

  • NALAM VIRUMBI - Madurai,இந்தியா

    அன்று இந்தியாவின் பெருமையை உலகறிய செய்த சுவாமி விவேகானந்தர் போலவே, இந்த நரேந்திர மோடியும் தற்போது செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவை உலகம் உற்று நோக்குகிறது என்பதில் எந்தவித ஐயப்பாடுமில்லை.

  • I LOVE MY INDIA - CHENNAI,இந்தியா

    நீங்க என்னதான் தமிழ் பெருமை பேசினாலும் நாங்க இங்க இருக்கிற ........

  • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

    இதற்கு எதிராக ராமசாமி வகையார் எதாவது சொல்ல, பூமராங் மாதிரி அவனுங்களையே தகர்க்க அண்ணாமலை ரெடி

  • neo - Nagercoil,இந்தியா

    இந்தியாவுக்கு வெளியே சென்றதும் இரக்கம் பத்தி பேசித்தான் ஆகணும், வேறு வழியில்லை.

  • mindum vasantham - madurai,இந்தியா

    singam bjp

  • Barakathulla - Singapore,சிங்கப்பூர்

    இந்த ஆள் தோட்ட அந்தோணி அல்பானீஸ் அரசியல் வாழ்வு அவ்வளவுதான் நம்ம மோதி ராசி அப்படி

    • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

      பேருதான் பெத்த பேரு .......

  • GMM - KA,இந்தியா

    திருக்குறள் உலக பொது மறை நூல். தமிழ் மொழி இந்திய மொழி தான். தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. குறள் கூறும் தமிழ் கலாச்சாரம் பின் பற்றி வாழ்பவர்கள் தமிழர், இந்தியர், இந்து மதத்தினர். தமிழ் பேசி பூநூல் அறுப்பது, கணவனரை இழந்து வெள்ளை சேலை அணியும் பெண்கள் மீது கறுப்பு நிற மை தெளிப்பது ( திராவிடர் ) அசுரர் குணம். பிரதமரின் வெற்றி பயணம்.

  • MP.K - Tamil Nadu,இந்தியா

    தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ஆகவே இந்தியர்கள் அனைவரும் தமிழ் படிக்க வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசால் வழங்கிவரும் பாடத்திட்டங்களில் தமிழை சேர்த்து வழங்க வேண்டும்

  • ராஜா -

    தமிழுக்கு என்றே ஒரு பிரதமர். இது வரை இருந்த எந்த பிரதமரும் தமிழை நினைத்துக்கூட பார்த்ததில்லை. மோடியால் தான் தமிழ் உலகெங்கும் தன் புகழ் மணக்கப்போகிறது. தமிழை வைத்து வெறும் விளம்பர வியாபாரம் செய்தவன் வாயில் இனி மண் தான்.

    • S S -

      விரைவில் தமிழ் ஆட்சி மொழி என்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    தமிழ் இந்திய மொழி என்று குழந்தைகளுக்கும் தெரியும்

  • அப்புசாமி -

    ஆனாலும் அதை இந்தியில் பேசுவாரு.

  • sankar - Nellai,இந்தியா

    திராவிடாஸ் ஏதாவது உளரவில்லையா

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Prime Minister for the Whole World....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement