Load Image
Advertisement

3 கிலோ தங்கம் கடத்தல்: கோவையில் இருவர் கைது

3 kg gold smuggling: Two arrested in Coimbatore    3 கிலோ தங்கம் கடத்தல்: கோவையில் இருவர் கைது
ADVERTISEMENT
ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்தவர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் நேற்று கோவை வந்தது. சந்தேகத்துக்குள்ளான 4 பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவர்களது பேன்ட் பாக்கெட் மற்றும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 3.03 கிலோவாகும். இதன் மதிப்பு சுமார் 1.9 கோடி ரூபாய் இருக்கும்.தங்கம் கடத்தி வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன், 27, சென்னையை சேர்ந்த ஷேக் முகமது 31, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement