Load Image
Advertisement

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி: பொதுமக்கள் போராட்டம்: போலீசார் சஸ்பெண்ட்

3 people who drank fake liquor died: public protest   கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி: பொதுமக்கள் போராட்டம்: போலீசார் சஸ்பெண்ட்
ADVERTISEMENT
விழுப்புரம்: கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்துள்ளதால், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த சங்கர், சுரேஷ், தரணி வேல் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உரிய விசாரணை நடத்த கோரி கிழக்க கடற்கரை சாலையில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் கலைந்து செல்வோம் என அவர்கள் கூறியதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Tamil News
@1br

சஸ்பெண்ட்




இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை இன்ஸ்பெக்டர் மரிய ஷோபி மஞ்சுளா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.



நிவாரணம்:





கள்ளச்சாராயம் குடித்து, உயிரிழந்த3பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். கள்ளச்சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய குற்றவாளிகை தேடும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.



வாசகர் கருத்து (35)

  • அப்புசாமி -

    நேத்திக்கிதான் புதுசா கள்ளச்சாராயம் குடிக்கிற மாதிரி பேசுறாங்க. குடிக்கிறது வெஷம்னு தெரிஞ்சு குடிக்கிறவங்களுக்கு எதுக்கு அரசு நிவாரணம்? தளபதியின் சிந்தக் காசிலிருந்து குடுக்க வேண்டியதுதானே? இனிமே குடும்பமே கள்ளச்சாராயத்தை வாங்கி ஊத்தி நிவாரணம் வாங்கிரும். சும்மாவா? 10 லட்சம் ஆச்சே.

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    சுத்த கிறுக்குத்தனமாக இல்லையா முதல்வரே? இப்படி கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் குடும்பத்துக்கு நல்ல வருமானம் என்று ஏழை மக்கள் நினைக்கலாமல்லவா?

  • g.s,rajan - chennai ,இந்தியா

    தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை இனித் தாறுமாறாக அதிகரிக்கும்....

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    ஸ்டாலின்தான் வராரு நல்லாச்சி தரப்போறாரு அதுதான் அதுதான் மக்களோட தலையெழுத்து.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இதில் பெண்கள் யாரும் இல்லையே ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement