ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைத்திருந்தால், 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், ‛ஜல் ஜீவன்' திட்டத்தை துவக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்மறையான நபர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. அவர்கள் அரசியல் பற்றி மட்டும் சிந்திப்பார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது: எங்கள் மாநிலத்தின் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகிறேன், தொடர்ந்து எழுதுவேன் என்றார்.
மோதல்
பிறகு மவுண்ட் அபு பகுதியில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:கர்நாடகாவை சேர்ந்த பழங்குடியின மக்கள் சூடானில் சிக்கி தவித்த போது, அவர்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், தேர்தலை மனதில் கொண்டு, காங்கிரஸ் இதனை பிரச்னை ஆக்க முயன்றது. அவர்களின் அடையாளத்தை வெளியிட்டு, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. அவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால், அதன் மூலம் மாநிலத்தில் அதிக ஓட்டு கிடைக்கும் என நினைத்தது. ஆனால், இந்தியர்களின் பாதுகாப்பை காக்க எந்த எல்லைக்கும் மோடி செல்வார் என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டது. ராஜஸ்தானிலும் பழங்குடியினரை பற்றி காங்கிரஸ் கவலைப்பட்டது கிடையாது.
இங்கு என்ன மாதிரியான ஆட்சி நடக்கிறது. முதல்வரை எம்.எல்.ஏ.,க்கள் நம்ப மறுக்கின்றனர். எம்.எல்.ஏ.,க்களை முதல்வர் நம்ப மறுக்கிறார். எனக்கு எதிராக நடக்கும் சதிக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டேன். நான் மக்கள் முன் மட்டுமே தலைவணங்குவேன். அவர்கள் தான் எனது ‛மாஸ்டர்கள்'. இவ்வாறு மோடி பேசினார்.
ஜி.எஸ் ராஜன்... சீக்கிரம் ஒவ்வொரு குடிமகன் தலையிலும் 15 லட்சம் கடன் ஏறும்.