ADVERTISEMENT
நாகர்கோவில்: கேரள மாநிலத்தில் இன்று முதல் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது. இதனால், அம்மாநில மற்றும் கர்நாடகா எல்லையிலுள்ள தமிழக பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை அதிகரிக்கும்.
கேரளாவில் இன்று முதல் பெட்ரோல் 1 லிட்டர் 109.98; டீசல் 98.52 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 103.85; டீசல் 95.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே களியக்காவிளை, குமுளி, ஆரியங்காவு போன்ற எல்லையோர தமிழக பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை அதிகரிக்கும் என, விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் விலை குறைவாக இருப்பதால், கேரளாவில் இருந்து சுற்றுலா மற்றும் இதர பணிகளுக்காக வரும் வாகனங்கள், தமிழக எல்லையில் பெட்ரோல், டீசல் டேங்கை நிரப்பும்.
வாசகர் கருத்து (4)
பாண்டிச்சேரியில் வாங்கி கேரளாவில் விற்றாலே ஒரு லிட்டருக்கு சுமார் ₹.15 லாபம் கிடைக்கிறது.
காரைக்கால், பாண்டியில் பெற்றோல் ரூபாய் 94 தான். லிட்டருக்கு 6 ரூபாய் குறைவு. அப்போ தமிழகம் ஏஆர் இந்த விலைக்கு விற்கிறது? யாரவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்
திராவிட மாடலின் மறைமுக கொள்ளைகளில் ஒன்று.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதைவைத்தே தமிழக ஆட்சியாளர்கள் ஒரிருமாதம் பெருமை பேசி குளிர் காய்வார்கள்.