Load Image
Advertisement

ஜல்லிக்கட்டை அங்கீகரிக்கவில்லை: மத்திய விளையாட்டு அமைச்சகம் பதில்

புதுடில்லி: ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை என லோக்சபாவில் மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Latest Tamil News


இது குறித்து லோக்சபாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை அங்கீகரிக்கவில்லை.
Latest Tamil News
மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. 'கேலோ இந்தியா' உட்பட எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும் கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (9)

  • பைரவர் சம்பத் குமார் -

    1). அந்த காலத்தில் மூன்று தொழில்கள் பிரதானமாக இருந்தது.2). முதலாவது விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழில்கள். இது பாமரனுக்கு.3). இரண்டாவது தொழில் போர் செய்து கால்நடைகளை கவர்த்தல், பொன் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பது. இது முரடர்கள் மற்றும் திருடர்களை சார்ந்தது.4). மூன்றாவது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் கோவில் கட்டுவது. இது சற்று புத்தி உள்ளவர்கள் செய்தது.5). இதில் முதல் இரண்டும் உடல்வலுவை சார்ந்தது. மூன்றாவது தொழில் உடல் வலுவுடன் புத்தியும் சேர்ந்தது.6). ஆகவே தனக்கு வரும் மாப்பிள்ளை அல்லது கணவர் உடல் வலுவுடன் இருந்தால்தான் இம்மாதிரியான வேலைகளை செய்ய முடியும் என்பதால் காளை அடக்குதல் மற்றும் பெரும் கற்களை தூக்குதல் போன்றவற்றில் சிறந்து விளங்குபவரை தேர்ந்து எடுத்தனர்.7). ஆனால் தற்பொழுது அறிவுக்கு மட்டமே நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது.8). மேலும் எருது அடக்குதல் என்பது அந்த காலத்தில் எருதுவின் கொம்பை பிடித்து நேருக்கு நேர் சண்டையிடுவது என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனையே எருதுவுடன் போர் புரிந்து வீரன் என்றும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • V GOPALAN - chennai,இந்தியா

    Players are just running behind Bulls instead of front side. Moreover bull just trying to escape from crowd through single exit entry. It should come around the ground and players catch the horns from front side.

  • spr - chennai,இந்தியா

    தேவையில்லாமல் உப்புப் பெறாத ஒரு விஷயத்தை ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள். நடப்பது ஜல்லிக்கட்டே இல்லை. அது மாடு பிடிப்பது (ஏறு தழுவுதல்) தான் இதனைத்தான் அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது. இதை தமிழக அரசியல்வியாதிகள் பெரிதாக்கி தமிழன் மானம் போயிற்று என்பார்கள் அவசியமா

  • sankar - chennai,இந்தியா

    ஒத்தை ஒத்தை ஆளாக காளைகளை எதிர் கொள்ளவேண்டும் எல்லாரும் சேர்ந்து அந்த வாயில்லா ஜீவனை ஹிம்சை படுத்தக்கூடாது

  • ஆரூர் ரங் -

    அதாவது அங்கீகரிக்குமாறு தமிழக அரசு கோரிக்கையே விடவில்லை. ஏதோ ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டுன்னு சொல்லி ஒரு போராட்டம்😙 கலவரத்தை தூண்டினோமா அதை வைத்து ஆட்சிக்கு வந்தோமா என்பதோடு அவர்களது எண்ணம் முடிவுற்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்